» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தசரா திருவிழா, கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 13, நவம்பர் 2025 8:04:12 PM (IST)

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் கடந்த 2 மாதங்களில் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக எட்டையபுரம், ஆத்தூர், கோவில்பட்டி மேற்கு, ஆறுமுகநேரி ஆகிய நிலையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறந்த பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தார்.
அதேபோன்று காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்டதற்காக சிப்காட், விளாத்திகுளம், தாளமுத்துநகர், தூத்துக்குடி தென்பாகம் ஆகிய காவல் நிலையங்களும்,
அதிகமான வழக்குகளை E-filing முறையில் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்காக சிப்காட், முறப்பநாடு, கோவில்பட்டி மேற்கு மற்றும் திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் தேர்வு செய்யப்பட்டடு மேற்படி 10 காவல் நிலையங்களின் சிறப்பான நடவடிக்கைகளுக்காக அதன் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும்,
மேலும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (13.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)

அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் : கூடுதல் கோட்ட மேலாளர் தகவல்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:56:21 AM (IST)










