» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.5,47,500 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
வியாழன் 13, நவம்பர் 2025 5:25:01 PM (IST)
சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தனியார் நிதி நிறுவனம் ரூ.5,47,500 வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சியைச் சார்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் காப்பீடு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக சேமித்து வைத்திருந்த கொப்பரைத் தேங்காய் அனைத்தும் சேதமடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதற்கு காப்பீடு செய்ததன் அடிப்படையில் இழப்பீடு கோரியுள்ளார். ஆனால் இது இழப்பீட்டுக்கு பொருந்தாது என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் அதிகப்படியாக காப்பீட்டு தொகை ரூ.3,37,500 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.2,00,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.5,47,500 ஐ ஆறு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் நிலை தடுமாறி விழுந்ததில் துறைமுக தொழிலாளர் பரிதாப சாவு
புதன் 10, டிசம்பர் 2025 10:54:35 AM (IST)

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)

பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது
புதன் 10, டிசம்பர் 2025 8:29:43 AM (IST)










