» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திங்கள் 10, நவம்பர் 2025 8:04:41 AM (IST)

திருமணம் முடிந்த மூன்றே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் முருகசிசுதா (21). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காசிகோபி என்பவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் முடிந்த மூன்றே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக முருகசிசுதா தனது கணவரை பிரிந்து சென்று தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

அங்கிருந்தவாறு கடந்த இரு மாதங்களாக பிறைகுடியிருப்பில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இருப்பினும் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த முருகசிசுதா திடீரென மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து சென்றனர். முருகசிசுதாவின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகசிசுதாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory