» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கற்களை ஏற்றிவந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பொதுமக்கள் கோரிக்கை!

திங்கள் 10, நவம்பர் 2025 7:41:47 AM (IST)



கோவில்பட்டி அருகே கற்களை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் நேற்று கவிழ்ந்தது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கொடுக்காம்பாறையில் செயல்படும் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவில்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விஜயாபுரி-தெற்கு திட்டங்குளம் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை: 

கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றி வரும் லாரிகள் அதிவேகமாக செல்வதால், வேகத் தடைகளை கடந்து செல்லும்போது லாரியில் உள்ள கற்கள் சாலைகளில் சிதறுகின்றன.லாரியில் கொண்டு செல்லும் கற்களை தார்ப்பாய்களால் மூடாமல் செல்கின்றனர். இதனால், சாலைகள் சேதமடைவது மட்டுமின்றி, அந்த பகுதி வாழ் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதைத் தடுக்க காவல் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory