» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)



தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் சிறுபாலம் கட்டும் பணியை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பக்கிள்ஓடைக்கு கழிவுநீர் செல்லும் கால்வாயில் அண்ணாநகர் 11வது தெருவில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் முறையிட்டனர். இதனையடுத்து அவர் அந்த பகுதியில் சிறிய பாலம் அமைத்து கழிவுநீர் தடையின்றி செல்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்துள்ளார். 

இந்நிலையில் சிறு பாலம் கட்டும் பணியையும், கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பான பணியையும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னா் இதுபோல் அண்ணாநகர் 6வது மற்றும் 7வது தெருவிற்கு இடையிலும், 9வது மற்றும் 10வது தெருவிற்கு இடையிலும் உள்ள குறுக்குத்தெருக்களில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

ஆய்வின்போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர் கனகராஜ், வட்டச் செயலாளர் பாலு (எ) பாலகுருசாமி, பெருமாள் கோவில் முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமார், கல்யாணி, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தந்தை இறந்த மனவேதனையில் மகன் தற்கொலை!

புதன் 10, டிசம்பர் 2025 8:01:45 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory