» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன் விரோதம்: காரை சேதப்படுத்திய 4 பேர் கைது!

ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:20:05 AM (IST)

கயத்தாறில் முன் விரோதம் காரணமாக காரை சேதப்படுத்திய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம் வெள்ளாளன்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் வேலு மகன் கிருஷ்ணசாமி (70). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகையா மகன் இருளப்பனுக்கும் இடையே நிலப் பிரச்னை குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் அக். 6ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு பின், கிருஷ்ணசாமி காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தாராம். இருளப்பனின் தூண்டுதலின்பேரில், அவரது உறவினர்கள் காரை வழிமறித்து தாக்கியதில் கார் சேதமடைந்ததாம். இது குறித்து கிருஷ்ணசாமி அக். 7ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து காரை சேதப்படுத்திய நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மதுரை ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் சாலையைச் சேர்ந்த தங்கம் மகன் வீரபாண்டி (39), அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் (25), மதுரை காமராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் கண்ணன் (39), மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் மணிகண்டன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory