» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முன் விரோதம்: காரை சேதப்படுத்திய 4 பேர் கைது!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:20:05 AM (IST)
கயத்தாறில் முன் விரோதம் காரணமாக காரை சேதப்படுத்திய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம் வெள்ளாளன்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் வேலு மகன் கிருஷ்ணசாமி (70). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகையா மகன் இருளப்பனுக்கும் இடையே நிலப் பிரச்னை குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் அக். 6ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்கு பின், கிருஷ்ணசாமி காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தாராம். இருளப்பனின் தூண்டுதலின்பேரில், அவரது உறவினர்கள் காரை வழிமறித்து தாக்கியதில் கார் சேதமடைந்ததாம். இது குறித்து கிருஷ்ணசாமி அக். 7ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து காரை சேதப்படுத்திய நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மதுரை ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் சாலையைச் சேர்ந்த தங்கம் மகன் வீரபாண்டி (39), அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் (25), மதுரை காமராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் கண்ணன் (39), மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் மணிகண்டன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, நவம்பர் 2025 9:01:20 PM (IST)

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:22:18 PM (IST)

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)








