» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 பவுன் நகை மீட்பு

ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:13:51 AM (IST)

தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட ரூ. 3.15 லட்சம் மதிப்புள்ள நகையை மீட்டு போலீசார் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி கோயில்பிள்ளை விளையைச் சேர்ந்த அந்தோணி மனைவி ஜெயலதா (45). இவர், வெள்ளிக்கிழமை 3.5 பவுன் தங்க நகையை அடகு வைப்பதற்காக பூபாலராயர்புரம் வழியாக மட்டக்கடை பகுதிக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, இவர் வைத்திருந்த நகை பை தவறிவிட்டதாம்.

இதன் மதிப்பு ரூ. 3.15 லட்சமாகும். இதுகுறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, தொலைந்து போன நகையை மீட்டு ஜெயலதாவிடம் நேற்று ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory