» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் மோதி டீ மாஸ்டர் பலி: நண்பர் உட்பட 3பேர் காயம்!

சனி 11, அக்டோபர் 2025 11:25:38 AM (IST)

தூத்துக்குடியில் பைக் மோதிய விபத்தில் டீ மாஸ்டர் உயிரிழந்தார். அவரது நண்பர் மற்றும் பைக்கில் வந்த 2பேர் காயம் அடைந்தனர். 

தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீதுமகன் முகமது அனிபா (65). இவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகில் உள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்ததும் தனது நண்பரான பாஸ்கர் (40) என்பவருடன் பீச் ரோட்டில் உள்ள ரோச் பூங்கா அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக வந்த வேகமாக பைக் கட்டுப்பாடை இழந்து இவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் முகமது அனிபா, அவரது நண்பர் பாஸ்கள் மற்றும் பைக்கில் வந்த தூத்துக்குடி லயன்ஸ் டவுன் சேர்ந்த பிராங்கிளின் மகன் ஆகாஷ் (19), அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்த சுரேஷ் குமார் மகன் பிரவீன் குமார் (20) ஆகிய 4பேரும் பலத்த காயமடைந்தனர். 

அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்க்ள பரிசோதனை செய்தபோது முகமது அனிபா இறந்தது தெரியவந்தது. மற்ற 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory