» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தற்கொலை!
வெள்ளி 3, அக்டோபர் 2025 8:42:25 AM (IST)
கோவில்பட்டியில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம், கண்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் விக்னேஷ் (36). 2011ஆம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்த இவர், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக இருந்தார். இவருக்கும், சிவகாசியைச் சேர்ந்த மகாலட்சுமிக்கும் 2016இல் திருமணமானது. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
மகாலட்சுமி குழந்தைகளுடன் சிவகாசியில் வசித்து வருகிறார். தம்பதியிடையே சொத்து விவகாரத்தில் பிரச்னை இருந்ததாம். இதனிடையே, மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி தனது கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமியின் வீட்டில் இருந்து வருகிறாராம். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மகாலட்சுமி அவரது தங்கையை வைத்து விக்னேஷ் மீது சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாராம்.
போலீசார் வழக்குப் பதிந்து, விக்னேஷை கைது செய்தனர். இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஜாமீனில் வந்த அவர், கோவில்பட்டி லட்சுமிபுரம் மேல காலனியில் உள்ள பெற்றோர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சடலத்தை போலீசார் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 8:11:17 PM (IST)

தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் எச்சரிக்கை
சனி 11, ஏப்ரல் 2026 4:44:31 PM (IST)

கார் - பிக்கப் வாகனம் மோதி விபத்து: இளைஞர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 4:33:49 PM (IST)

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை !
சனி 11, ஏப்ரல் 2026 4:30:17 PM (IST)

யார் பொறுப்பு? விழிப்புணர்வுத் திரைப்படம்: கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!
சனி 11, ஏப்ரல் 2026 4:05:07 PM (IST)

ஏப்ரல் 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:14:31 PM (IST)







