» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது : அரிவாள் பறிமுதல்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 4:00:32 PM (IST)
தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி என்ற மாக்கான் (45) இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருந்து வருகிறது. இந்நிலையில், இவர் எப்.சி.குடோன் ரவுண்டானா அருகே உள்ள டீக்கடை முன்பாக கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர. அப்போது, அந்த வழியாக வந்த கூலித் தொழிலாளி செந்தில் (44) என்பவரை வழிமறித்து, அவரது மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தி பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிக் கொண்டிருத்த அந்தோணி என்ற மாக்கானை தென்பாகம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் பொங்கல் சிறப்பு விற்பனை!
புதன் 14, ஜனவரி 2026 8:48:48 PM (IST)

வடவல்லநாடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
புதன் 14, ஜனவரி 2026 4:31:16 PM (IST)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் 16ம் தேதி பொங்கல் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி
புதன் 14, ஜனவரி 2026 4:06:44 PM (IST)

தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவரை தாக்கிய 2பேர் கைது
புதன் 14, ஜனவரி 2026 3:57:03 PM (IST)

பிப்-12ல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் : தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை!
புதன் 14, ஜனவரி 2026 3:38:50 PM (IST)

பொங்கல் பரிசு தொகை முதியவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 14, ஜனவரி 2026 3:27:24 PM (IST)









inbaOct 1, 2025 - 10:45:22 PM | Posted IP 162.1*****