» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:35:35 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மற்றும் காவல்துறை அலுவலகத்தில் "சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் "சமூக நீதி நாள்” உறுதிமொழியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், முன்னிலையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
மேலும், தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேது ராமலிங்கம், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு மற்றும் அனைத்துத் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் நாள் சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் உட்பட காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் மாவட்ட காவல் அமைப்பு பணி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களால் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் சி.ப்ரியங்கா முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், உதவி ஆணையர் சரவணகுமார், நகர்நல அலுவலர் சரோஜா, கவுன்சிலர்கள் கீதா முருகேசன், சரவணகுமார், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சனி 18, ஜூலை 2026 8:32:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் : 20 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.75.25 லட்சம் வசூல்!
சனி 18, ஜூலை 2026 5:17:07 PM (IST)

தொல்காப்பியத்தைத் தொடர்ச்சியாக எழுதி உலக சாதனை முயற்சி: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள்!
சனி 18, ஜூலை 2026 4:53:16 PM (IST)

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு: போலீசாருக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு
சனி 18, ஜூலை 2026 3:53:20 PM (IST)

ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:46:17 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆதார் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அஞ்சல்துறை அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:30:02 PM (IST)








