» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 3பேர் கைது : சரக்கு வாகனம், பைக் பறிமுதல்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:57:58 PM (IST)

விளாத்திகுளம் அருகே ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் நாகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சரக்கு வாகனத்திற்கு முன்பு ஒரு இருசக்கர வாகனமும் பின்பு ஒரு இருசக்கர வாகனமும் வந்தது அறிந்த சங்கரலிங்கபுரம் போலீசார் சந்தேகம் அடைந்து வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த முயன்ற போது, அந்த வாகனத்தில் மூன்று நபர்கள் காவல்துறையினரிடம் தகாத வார்த்தையில் பேசி தகராறு செய்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த சரக்கு வாகனத்தை சோதனை மேற்கொண்டதில் அதில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 130 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட என்.வேடபட்டி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகன் கார்த்திக்குமார் (33), தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேஷ் (25), ஆற்றங்கரை தானியேல் நகர் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் அன்புதாசன்(25) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே கார்த்திக் மீது மாசார்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு வழக்கும், வெங்கடேஷ் மீது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 8:11:17 PM (IST)

தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் எச்சரிக்கை
சனி 11, ஏப்ரல் 2026 4:44:31 PM (IST)

கார் - பிக்கப் வாகனம் மோதி விபத்து: இளைஞர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 4:33:49 PM (IST)

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை !
சனி 11, ஏப்ரல் 2026 4:30:17 PM (IST)

யார் பொறுப்பு? விழிப்புணர்வுத் திரைப்படம்: கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!
சனி 11, ஏப்ரல் 2026 4:05:07 PM (IST)

ஏப்ரல் 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:14:31 PM (IST)







