» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லோடுவேன் - கன்டெய்னர் லாரி நேருக்குநேர் மோதல் : தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
புதன் 3, செப்டம்பர் 2025 8:22:49 AM (IST)

பழையகாயல் அருகே லோடு வேன் டயர் வெடித்து எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில், 2 வாகனங்களும் சாலையில் கவிழ்ந்ததால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளத்தில் இருந்து புன்னக்காயலில் மீன் ஏற்றுவதற்காக நேற்று காலையில் கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ராமநாதபுரம் மாவட்டம் கடுகுசந்து சத்தியத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரி (42) ஓட்டி வந்தார். இந்த லாரி தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் பழையகாயல் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே ஏரலில் இருந்து செங்கல் ஏற்றி கொண்டு லோடு வேன் ஒன்றுவந்து கொண்டிருந்தது. இந்த வேனை ஆலடியூர் குலவேளாளர் தருவை சேர்ந்த சுப்பையா மகன் சிவகுமார் (26) ஓட்டி வந்தார்.
சுமார் 7.30 மணியவளில் பழையகாயல் அருகேயுள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, லோடுவேன் முன்பக்க டயர் திடீரென வெடித்தில், தாறுமாறாக ஓடி எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கன்டெய்னர் லாரியும், லோடுவேனும் சாலையில் கவிழ்ந்தன. கன்டெய்னர் லாரி டிரைவர் மாரியும், லோடுவேன் டிரைவர் சிவகுமாரும் காயத்துடன் தப்பினர்.
கன்டெய்னர் லாரியும், லோடு வேனும் சாலையில் கவிழ்ந்து கிடந்ததால், தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், தூத்துக்குடியில் இருந்த வந்த வாகனங்கள் கோவங்காடு, ஏரல் வழியாகவும், திருச்செந்தூரில் இருந்து வந்த வாகனங்கள் மஞ்சள்நீர்காயல், ஏரல் வழியாகவும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து சாலையில் கிடந்த வாகனங்கள் அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த விபத்தால் தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)

தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)





