» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சாலை விபத்தில் பெண் பரிதாப சாவு

செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 4:28:37 PM (IST)

தூத்துக்குடியில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தூத்துக்குடி மீனாட்சிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மனைவி முத்தரசி (48). இவரது மகள் ஐஸ்வர்யா (30),  பேத்தி காயத்ரி (5) ஆகிய மூன்று பேரும் கடந்த 1ம் தேதி ஆறுமுகநேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஸ்கூட்டியில் சென்றுவிட்டு மாலையில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் ரோடுமுத்தையாபுரம் அருகே வரும்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் முத்தரசி, அவரது மகள் ஐஸ்வர்யா பேத்தி காயத்ரி ஆகிய மூன்று பேரும் காயம் அடைந்தனர். மூன்று பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முத்தரசி இன்று காலை இறந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory