» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரிசி வியாபாரி வீட்டில் ஏசி வெடித்து தீவிபத்து
சனி 5, ஜூலை 2025 3:35:21 PM (IST)
தூத்துக்குடியில் அரிசி வியாபாரி வீட்டில் ஏசி வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
தூத்துக்குடி எம்.கே. தெருவைச் சேர்ந்தவர் பாரூக். அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் இன்று மாடி அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசி திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த அறையில் இருந்த பாருக் மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தைகள் ஆகியோர் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே கீழ் பகுதிக்கு வந்தனர்.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் தீ மளமளவென பரவி அந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது அந்த அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உடனடியாக தீயணைப்புத் துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 5:22:09 PM (IST)

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!
புதன் 18, பிப்ரவரி 2026 4:24:22 PM (IST)

புதிய வருவாய் அலுவலகத்தை திறக்க நடவடிக்கை : தமாகா இளைஞர் அணி கோரிக்கை!
புதன் 18, பிப்ரவரி 2026 4:23:08 PM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில்: தெற்கு ரயில்வே பரிந்துரை!
புதன் 18, பிப்ரவரி 2026 4:06:18 PM (IST)

சாத்தான்குளம் வட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 3:51:44 PM (IST)

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!
புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST)










