» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணிகள்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு

சனி 5, ஜூலை 2025 3:14:19 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 7ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திருச்செந்தூரில் முகாமிட்டு கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்

மேலும் பக்தர்கள் மீது புனித நீரை தெளிப்பதற்கான ட்ரோன் தொழில்நுட்பத்தை பார்வையிட்டும் மற்றும் குடமுழுக்கு நிகழ்வை நேரலையில் காண்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள LED திரைகளின் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தும் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors




CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory