» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 7ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 4, ஜூலை 2025 3:45:26 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவினை முன்னிட்டு வருகிற 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா 07.07.2025 அன்று திங்கட்கிழமை நடைபெற உள்ளதால். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி. கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

எனினும், 07.07.2025 அன்று அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது எனதெரிவிக்கப்படுகிறது. 

இந்த விடுமுறைக்குப் பதிலாக 19.07.2025 அன்று மூன்றாம் சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

PraneeshJul 4, 2025 - 08:54:13 PM | Posted IP 172.7*****

July 7 leave or school

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory