» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு

செவ்வாய் 10, ஜூன் 2025 10:23:14 AM (IST)

தூத்துக்குடி அருகே வீட்டு வாசலில் பாய் விரித்து படுத்திருந்தபோது, பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகில் உள்ள தெற்கு கோடாங்கிபட்டி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சந்திரவேல் (60), விவசாயி. இவர் நேற்று இரவு இரவு 10 மணியளவில் தனது வீட்டு வாசலில் பாய் விரித்து படுத்து தூங்கினாராம். அப்போது ஒரு பாம்பு அவரை கடித்துள்ளது.

இதையடுத்து அரது மகன் ஜெயக்குமார் கார் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எப்போதும்  வென்றான் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மேகலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education




New Shape Tailors



Thoothukudi Business Directory