» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளத்தில் சித்திரை திருவிழா தேரோட்டம்!

வெள்ளி 9, மே 2025 10:04:45 PM (IST)



விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலகலமாக நடந்தது.

விளாத்திகுளத்தில்‌ 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் 10-ம் நாளான இன்று மாலையில் தேரோட்டம்  வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. 

காலை 10.30 மணிக்கு கீழவாசலில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து ரதாரோகணம் நடந்தது. பின்னர் சுவாமி, அம்மன் அலங்கார கோலத்தில் தேரில் எழுந்தருளினர். மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. திருத்தேர் சுவாமிகளுடன் நிலையிலிருந்து புறப்பட்டு கீழரத வீதி, காய்கறி மார்க்கெட், மதுரை ரோடு வழியாக மீண்டும் கோவிலின் தேர் நிலையை வந்தடைந்தது. 

பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகம் பொங்க வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர். மேலும், இத்திருத்தேர் பவனியின் போது வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் பூ, பழம், தேங்காய், மாலை உள்ளிட்டவற்றை கொண்டு சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory