» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு : எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 9, மே 2025 7:56:32 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.
தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் அதிகரித்த எச்சரிக்கை நிலையை கருத்தில் கொண்டு, பல பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் பல அடுக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் சோதனை, உடமைகள் சோதனை, வாகன சோதனை மற்றும் பிற நாசவேலை தடுப்பு ஒத்திகைகளின் செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. கூடுதல் ஆயுதமேந்திய விரைவு அதிரடி படைகள் மற்றும் அதிகப்படுத்தப்பட்ட பணியாளர்களின் செயல்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. விமான நிலைய எல்லைகள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கூடுதல் ஆயுதமேந்திய ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

அண்மையில் நடத்தப்பட்ட விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகையின் கூறுகள் புதுப்பிக்கப்பட்டன. மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பில் தீவிர கண்காணிப்பை தொடர்ந்து பராமரிக்க அறிவுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மே.16ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
திங்கள் 12, மே 2025 4:29:20 PM (IST)

மே 15ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
திங்கள் 12, மே 2025 3:55:35 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 3:45:31 PM (IST)

அரசு மருத்துவமனையில் ரூ.49 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடம் : கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
திங்கள் 12, மே 2025 3:37:21 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது
திங்கள் 12, மே 2025 3:15:10 PM (IST)

கருகும் நிலையில் வாழைப்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!
திங்கள் 12, மே 2025 12:04:24 PM (IST)
