» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணிகள் : அமைச்சர் பி. கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 9, மே 2025 5:28:19 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (09.05.2025), தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.
சமூகத்தில் வீடற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதி பெறுவதற்காக இலவச வீட்டுமனைப் பட்டா அல்லது வீடு வழங்க வேண்டுமென்பதே அரசின் கொள்கையாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு அரசாணை எண்.97 மற்றும் 205இன் கீழ் மாநகரப் பகுதியிலிருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்ளும், நகர்ப்புறப் பகுதியிலிருந்து 08 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்ளும் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி 5 வருடத்திற்கு மேல் குடியிருந்துவரும் நபர்களுக்கு சிறப்புத் திட்டத்தின்கீழ் வரன்முறைபடுத்தி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோன்று, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் தகுதியுடைய நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் 5 இலட்சம் பட்டா வழங்கும் திட்டத்தின்கீழ் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதியில் மூன்று சென்ட் நிலமும், நகர்ப்புற பகுதியில் இரண்டு சென்ட் நிலமும், மாநகராட்சிப் பகுதிகளில் இரண்டு சென்ட் நிலமும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு நடைமுறையில் உள்ள விதிகளின்படியும், இதர நிபந்தனைகளுக்கு உட்பட்டும் இலவச வீட்டுமனை ஒப்படை செய்யப்படுகிறது.
அந்தவகையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநகர மற்றும் ஊரகப் பகுதிகளில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்பெறுவதை உறுதிசெய்யும் விதமாக ஊரக, நகர மற்றும் நத்தம் உட்பிரிவு மனுக்கள், முழுப்புலம் மற்றும் புல எல்லை மனுக்கள், தூத்துக்குடி மாநகரத்தில் இணையவழி நகர அளவை ஆவணங்களில் விடுபட்ட பெயர்களை சேர்க்கவும், சர்க்கார் நன்செய், புன்செய் நிலங்களை சரிசெய்தல், சர்க்கார் புறம்போக்கு இனங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களின் மூலம் நில அளவை இயக்குநருக்கு பிரேரணை அனுப்பவும், GR நத்தம் இனங்களை நிலஅளவை செய்திடவும் உள்ளிட்ட பணிகள் குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் வருவாய்த்துறை மற்றும் நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை எவ்வித தொய்வும் இன்றி விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, உதவி இயக்குநர் (நில அளவை) சீனிவாசகன், தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், மண்டல துணை வட்டாட்சியர், வட்ட துணை ஆய்வாளர், நகர சார் ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மே.16ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
திங்கள் 12, மே 2025 4:29:20 PM (IST)

மே 15ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
திங்கள் 12, மே 2025 3:55:35 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 3:45:31 PM (IST)

அரசு மருத்துவமனையில் ரூ.49 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடம் : கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
திங்கள் 12, மே 2025 3:37:21 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது
திங்கள் 12, மே 2025 3:15:10 PM (IST)

கருகும் நிலையில் வாழைப்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!
திங்கள் 12, மே 2025 12:04:24 PM (IST)

முருகன்மே 10, 2025 - 01:00:12 PM | Posted IP 172.7*****