» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் குழந்தை கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தாய் கைது!

வெள்ளி 9, மே 2025 5:05:45 PM (IST)

திருச்செந்தூரில் 2¾ வயது பெண் குழந்தை கொலை தொடர்பாக தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குமாரபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (38). இவர் வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு ஸ்ரீதேவ் (8), இரண்டே முக்கால் வயது பெண் குழந்தை ஆதிரா ஆகியோர் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீதேவ் முக்காணியில் உள்ள தாத்தாவின் வீட்டில் உள்ளார்.

இந்நிலையில் பார்வதி தனது மகள் ஆதிராவுடன் நேற்று மாலை வீட்டில் படுத்திருந்தாராம். அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து, குழந்தை ஆதிராவின் கழுத்தை நெரித்தபடி, பார்வதியிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றதாகவும், அப்போது குழந்தை மூச்சுத்திணறியதால் அந்த நபர் குழந்தையையும், சங்கிலியையும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இத்கவல் அறிந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், தாலுகா காவல் ஆய்வாளர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், சிறுமி ஆதிரா மரணத்தில் தாய் பார்வதி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.  பார்வதி கடந்த ஓராண்டாக லேசாக மனநலம் பாதிக்கப்பட்டு திருநெல்வேலியில் தனியார் மனநல மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory