» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 9, மே 2025 10:42:19 AM (IST)
தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி சிவன் கோவில் அருகே தெப்பக்குளத்தில் சுமார் 10 அடி உயரம் தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் ஒரு பெண் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். பின்னர் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார் என்று தெரியவில்லை அவருக்கு சுமார் 65 வயது இருக்கும். சிவப்பு சிற பூப்போட்ட சேலை அணிந்து இருந்தார். அவரது கழுத்தில் கவரிங் நகைகள் அணிந்து உள்ளார். தெப்பக்குளத்தில் பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் உலக மகளிர் தின விழா: அமைச்சர் கீதா ஜீவன் விருது வழங்கினார்
திங்கள் 9, மார்ச் 2026 11:01:23 AM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 9, மார்ச் 2026 10:26:43 AM (IST)

கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 8:15:19 AM (IST)

வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!
திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)

மதிமுக மாநில நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்
திங்கள் 9, மார்ச் 2026 8:00:44 AM (IST)

சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:44:39 PM (IST)







