» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

Share

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: 80% மதிப்பெண் பெற்ற மாணவர்க‌ள் விண்ணப்பிக்கலாம்!

புதன் 10, மார்ச் 2010 11:14:23 AM (IST)

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இது தொட‌ர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. கடந்த 2009-2010ஆம் கல்வி ஆண்டில் கல்லூரிகளில் சேர்ந்தோரிடமிருந்து இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. உதவித்தொகைக்கு கட் ஆப் மார்க்கும் நிர்ணயிக்கப்பட்டது.

தமிழக பள்ளி தேர்வு வாரியத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த உதவித்தொகைகளின் எண்ணிக்கை (4,883) அளவில் போதிய விண்ணப்பங்கள் வரவில்லை. இதைத்தொடர்ந்து கட் ஆப் மார்க் குறைக்கப்பட்டு தற்போது பிளஸ்2 தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே, 2009-2010ஆம் கல்வி ஆண்டில் கல்லூரிகளில் சேர்ந்த, மேற்படி மதிப்பெண் தகுதி பெற்ற மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பத்தை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் (www.tn.gov.in/dge) பத‌வி‌யிற‌க்க‌ம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 'இணை இயக்குனர் (மேல்நிலை), அரசு தேர்வுகள் இயக்ககம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச்சாலை, சென்னை 600 006' என்ற முகவரிக்கு வரு‌ம் 19ஆ‌ம் தேதிக்குள் பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எ‌ன்று வசுந்தராதேவி கூறியுள்ளார்.


மேலும் தொடரும் செய்திகள்

சட்ட ஆர்வலர்கள் படுகொலைக்கு கண்டன கூட்டம்

வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 6:32:10 PM (IST)

விபத்து: நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி!

ஆர்.முருகன் | புதன் 28, ஜூலை 2010 9:20:06 AM (IST)

Sponsored Ads