» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

தூத்துக்குடியில் பூ மார்க்கெட், காய்கனி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேற்று (25.04.2025) தூத்துக்குடி நகர உட்கோட்ட பகுதிகளுக்கு ரோந்து மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டிருந்தும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் கலந்துரையாடினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று தூத்துக்குடி நகர உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளான டூவிபுரம், காய்கனி மார்க்கெட், பூ மார்க்கெட், மீனாட்சிபுரம் மற்றும் 4ம் கேட் ஆகிய இடங்களுக்கு ரோந்து மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தும், சந்தேகப்படும்படியாக சட்ட விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் காவல்துறையினருக்கு தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்வின் போது மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
YogeshApr 27, 2025 - 02:02:46 PM | Posted IP 162.1*****
Pls close wine shop dear ganesh bakery
ராஜாApr 26, 2025 - 08:30:28 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி சிதம்பரம் நகரில் உள்ள மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றினால் மிகவும் நன்றாக இருக்கும்... அது மட்டும் இல்லாமல் ஒ
பிரயண்ட நகர் முதல் தெருவில் உள்ள டீ கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்தை ரோட்டிலேயே நிறுத்தி விடுகிறார்கள் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே அதை சரி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்...
ஜெயமாரி நம்பிApr 26, 2025 - 10:57:19 AM | Posted IP 104.2*****
மிக அதிகமாக பெண்கள் நடமாடக் கூடிய காய்கனி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக்
கை வேற இடத்துக்கு மாற்றினால் நல்லது
மேலும் தொடரும் செய்திகள்

கொரியர் பார்சலில் வந்த 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : போலீசார் விசாரணை!
வியாழன் 11, டிசம்பர் 2025 9:19:00 PM (IST)

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை எதிர்த்து பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
வியாழன் 11, டிசம்பர் 2025 8:54:06 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:46:53 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:30:35 PM (IST)

உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம் : இழப்பீடு வழங்க மக்கள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:24:52 PM (IST)

ஓய்வூதியப் பலன்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வியாழன் 11, டிசம்பர் 2025 8:18:53 PM (IST)











சண்முகம்Apr 28, 2025 - 09:07:13 AM | Posted IP 162.1*****