» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் தொழிற்சாலை ஒப்பந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் சவேரியார் பிச்சை மகன் ஆனந்த் சைரஸ் (41), இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சரோபியா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்ப முதல் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ஆனந்த் சைரஸ் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால் அவர் குடியிருந்த வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் சொல்லவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி ராஜகோபால் நகர் வது தெருவில் வாடகை வீட்டில் குடியேறினர். அங்கு கடந்த 19ஆம் தேதி இரவு குடிபோதையில் காம்பவுண்டில் பெண்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ஆனந்த் சைரஸ் என் வீட்டுக்கு எப்படி வரலாம் என்று திட்டினாராம். அதற்கு போலீசார் நாளை காலையில் உனது மனைவியுடன் காவல் நிலையம் வர வேண்டும் என்று கூறவே இதனால் தன்னை போலீசார் அவதூறாக திட்டிவிட்டு, வீட்டுக்குள் சென்ற ஆனந்த் சைரஸ் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.

இதில் உடல் முழுவதும் தீயில் கருகி தீக்காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் இன்று மாலை 6.30 மணி அளவில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

தமிழன்Apr 23, 2025 - 10:01:06 AM | Posted IP 172.7*****

காரணம் = மது , வாழ்க அப்பா ஆட்சி , வாழ்க திராவிடம்

JeyakumarApr 23, 2025 - 07:58:06 AM | Posted IP 104.2*****

நல்ல சொம்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors


Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory