» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)



தூத்துக்குடியில் இடி மி்ன்னலுடன் கனமழை பெய்தது. மேலும், மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழந்தது.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, தூத்துக்குடி மாநகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாலை 6 மணியளவில் மாநகா் பகுதி முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதி, சாலைகளில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில், தட்டாபாறை எஸ்எஸ் காலனியைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்து என்பவரது பசு மாடு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது. மேலும் மாநகரின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital


CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory