» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தொழிலதிபர் மீது தாக்குதல் : 4பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

திங்கள் 14, ஏப்ரல் 2025 10:59:44 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் முன்பு மது குடிப்பதை தட்டிக் கேட்ட தொழிலதிபரை தாக்கிய 4பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராசையா மகன் ஜேக்கப் (69) தொழிலதிபர். இவரது வீட்டு முன்பு 4பேர் கொண்ட கும்பல் மது அருந்தினார்களாம். இதனை பார்த்த ஜேக்கப் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் அந்த 4பேரும் தகராறு செய்து ஜேக்கப்பை சரமரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் அவர் பலத்த காயமடைந்த ஜேக்கப் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 4பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors

CSC Computer Education





Thoothukudi Business Directory