» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சப் இன்ஸ்பெக்டர் 3வது முறையாக ஆயுதப்படைக்கு மாற்றம்!

திங்கள் 14, ஏப்ரல் 2025 10:52:32 AM (IST)

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் 3வது முறையாக ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவார் முத்தமிழ் அரசன். இவர் மீது பல்வேறு புகார்கள் எதிரொலியாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். 

பின்னர் மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில் பணி அமர்த்தபட்டார். இதற்கிடையே வழக்கறிஞர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அதே தென்பாகம் காவல் நிலையத்தில் பணி நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரையன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை அவர் தாக்கியதாகவும், அதனால் அந்த வாலிபருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசனை மீண்டும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

வழக்கறிஞர்கள்Apr 16, 2025 - 06:58:49 PM | Posted IP 172.7*****

காக்கி வேடத்தில் குற்றவாளிகள், எனவே ஆயுதப்படைக்கு மாற்றும் சட்டத்தை திருத்த வேண்டும் , சஸ்பெண்ட் தான் ஒரே தீர்வு

தமிழன்Apr 14, 2025 - 01:26:40 PM | Posted IP 104.2*****

மொத்தத்தில் நேர்மையான அதிகாரிகளை நல்லவர்களாக இருக்கவிடுவதில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory