» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை அரிவாளால் தாக்கிய 3பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

திங்கள் 14, ஏப்ரல் 2025 10:46:35 AM (IST)

தூத்துக்குடியில் மது போதையில் தகராறு செய்து வாலிபரை அரிவாளால் தாக்கிய 3பேரை போலீசார் தேடி  வருகின்றனர்.  

தூத்துக்குடி 3வது மைல் மெயின் ரோடு முதல் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஸ்ரீராம் (23), கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அங்குள்ள ஒரு ஹோட்டல் எதிரே நின்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் மது போதையில் தகராறு செய்து ஸ்ரீராமை சரமாரியாக அரிவாளால் தாக்கினார்களாம். 

இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து 3 பேர் கும்பலை தேடி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory