» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.94.54 இலட்சம் செலவில் சாலைப் பணி: அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
வெள்ளி 11, ஏப்ரல் 2025 12:29:10 PM (IST)

தூத்துக்குடி ஜெயராஜ் சாலைப் பகுதியில் ரூ.94.54 இலட்சம் செலவில் பயனுறு சாலை அமைக்கும் பணியினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயராஜ் சாலைப் பகுதியில் இன்று(11.04.2025), மதுரை-தூத்துக்குடி சாலை கி.மீ132/6ல் தூத்துக்குடியில் சாலை மேம்பாலம் கட்டும் பணியில் தூத்துக்குடி பக்கம் மற்றும் ஜெயராஜ் சாலைப் பகுதியில் பயனுறு சாலை அமைக்கும் பணியினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
மீளவிட்டான் தூத்துக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கி.மீ 651/12-13 இருப்புப்பாதை கடவு எண்.485க்கு பதிலாக, மதுரை- தூத்துக்குடி சாலை கி.மீ132/6ல் தூத்துக்குடியில் சாலை மேம்பாலம் கட்டும் பணியில் தூத்துக்குடி பக்கம் மற்றும் ஜெயராஜ் சாலை பகுதியில் பயனுறு சாலை அமைக்கப்படவுள்ளது.
மேலும், மேம்பாலம் கட்டுமானப் பணியானது ரூ.20.27 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, தூத்துக்குடி பக்கம் மற்றும் ஜெயராஜ் சாலைப் பகுதியில் 400 மீட்டர் நீளத்திற்கு ரூ.94.54 இலட்சம் செலவில் பயனுறு சாலை அமைப்பதற்கான பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி கோட்டப்பொறியாளர் (திட்டங்கள்) லிங்கசாமி, தூத்துக்குடி உதவி கோட்டப்பொறியாளர் (திட்டங்கள்) உமாதேவி, இளநிலைப் பொறியாளர் அம்ஜெத்கான் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)

ஏ ராஜவேல் 69c/1 டுவிபுரம் இரண்டாம் தெரு தூத்துக்குடி 3Apr 11, 2025 - 12:54:28 PM | Posted IP 162.1*****