» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 12:28:02 PM (IST)

இராஜாக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்ல வீடுகள் கட்டபட்டு வருகின்றன.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சிஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தின் (KKI) 2024-25 கீழ் கட்டப்பட்டுள்ள வீடு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுடன் அமைந்திட வீட்டின் பயனாளி மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மேலசங்கரன்குழி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கூடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்கும் குப்பை மக்கா குப்பைகள் என உரிய முறையில் தரம் பிரித்து, உரம் தயாரிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர், பணியாளர்கள், பயனாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
