» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பஸ் நிலையத்தில் புதிய சுகாதார வளாகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

வியாழன் 13, மார்ச் 2025 12:06:00 PM (IST)



தூத்துக்குடியில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய சுகாதார வளாகம் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையம், முத்து நகர் கடற்கரை, சிவன் கோயில் மற்றும் ரோச் பூங்கா கடற்கரை ஆகிய இடங்களில் மேலும் ஒரு புதிய சுகாதார வளாகம் வேண்டும் என்ற மாநகர மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து அந்தப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். 

மேலும் வரும் நாட்களில் பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி ஆகியோர் உடனடிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory