» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுகாதார ஆய்வாளர் தற்கொலை : பேரூராட்சி தலைவிக்கு எதிரான மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 13, மார்ச் 2025 11:22:40 AM (IST)
சுகாதார ஆய்வாளர் தற்கொலை விவகாரத்தில் பேரூராட்சி தலைவிக்கு எதிரான மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் சுடலைமாடன் உடன்குடி பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணி க்ஷயாற்றினார். பதவி உயர்வு விவகாரத்தில் என் கணவரை சாதியை சொல்லி திட்டினர். இதனால், மனமுடைந்த எனது கணவர் விஷம் குடித்து கடந்த 2023ல் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக குலசேகரபட்டினம் போலீசார், முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி நிர்வாக அதிகாரிபாபு உள் ளிட்டோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் இறுதி அறிக்கை தூத்துக்குடி தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் துவங்கியுள்ள நிலையில், சாட்சிகளுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதனால் வழக்கு விசாரணை முறையாக நடக்க வாய்ப்பில்லை. எனவே, தூத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை திருநெல்வேலி நீதிமன்றம் அல்லது வேறு மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு நிலுவையில் உள்ளது.
ஆனால், பேரூராட்சியின் தற்போதைய தலைவராக ஹூமாரியா ரமீஷ்பாத்திமா உள்ளார். இவர், முன்னாள் தலைவியின் உறவினர். இவரால் சாட்சியம் பாதிக்ககூடும். எனவே, அவர் மீது தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விவேக்கு மா சிங், "மனுதாரர் கோரிக்கை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி மண்டல பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் ஆகியோர் அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிக்க உரிய வாய்ப்பளித்து மனுவை பரிசீலித்து 4 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தர விட்டு மனுவை முடித்து வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
