» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 2 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்!

வியாழன் 13, மார்ச் 2025 8:50:46 AM (IST)

தூத்துக்குடியில்  2 நாட்களுக்கு பின்னர் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு  மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மார்ச் 11 மற்றும 12 ஆகிய 2 நாட்கள் பலத்த மழை பெய்யும், கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு ஆலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. 

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 1000க்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபர் படகுகள், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வானிலை சீரடைந்துள்ள நிலையில், தூத்துக்குடியில் இன்று சுழற்றி முறையில் 93 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory