» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவரின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: பெரியாரிய உணர்வாளர்கள்

புதன் 12, மார்ச் 2025 5:39:39 PM (IST)



ஸ்ரீவைகுண்டம் அருகே தாக்கப்பட்ட பள்ளி மாணவரின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய மற்றும் சமூக நலன் சார்ந்த இயக்கங்கள் சார்பாக நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். 

பின்னர் அவர்கள் கூறுகையில், "ஸ்ரீவைகுண்டம் தாலுகா அரியநாயகபுரம் கிராமத்தை சார்ந்த 11ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவன் தேவேந்திர ராஜாவை மூன்று மாணவர்கள் பேருந்தில் இறக்கி வழிமறித்து படுகொலை செய்ய முற்பட்டார்கள். தேவேந்திரராஜா பயங்கர அரிவாள் வெட்டு காயங்களுடனும், விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் நெல்லை மாவட்டம் ஐ கிரவுண்ட் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அது சம்பந்தமாக நேற்று அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் படுத்தினோம். தூத்துக்குடி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்தபோது அவர் எங்களிடம் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக கலந்து பேசினார். சமூகத்தில் நடக்கின்ற அநீதிகளை நன்றாக புரிந்து கொண்டவராக, சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்று தெரிந்து கொண்டவராக எங்களிடம் பேசியது சற்று ஆறுதல் இருந்தது. 

ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் ஏன் அவர்களை இன்னும் பார்க்க செல்லவில்லை என்ற கேள்வியை முன்வைத்த போது அவர் அதற்கு சற்று சொல்ல தயங்கினார். இருந்தாலும் பரவாயில்லை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் பேசிய வார்த்தைகள் எங்களுக்கு ஆறுதலாக இருந்து இருந்தது என்பதை தெளிவுபடுத்துகிறோம். 

மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இல்லாத காரணத்தினால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இருந்தார்கள் அவரிடம் சென்று கோரிக்கை மனு வழங்கினோம். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்போம் பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் என்று உறுதி அளித்தார் என தெரிவித்தனர். 

இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தாயக மக்கள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு, AICCTU தொழிற்சங்கம், மக்கள் அதிகாரம், விழித்தெழு நலச் சங்கம், கிறிஸ்தவ தலித்திய வாழ்வுரிமை இயக்கம் போன்ற கட்சிகள் இயக்கங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து

m.sundaramMar 12, 2025 - 08:48:35 PM | Posted IP 172.7*****

The ruling Dravida Model govt is very busy in waging war against the Union Education Minister. Their force is active in burning the Union Minister posters. They find no time to redress the actual distress of the SC school boy. The local MLA is busy in supporting the ruling party. This is state of SC community in Drivida Model govt. The recommendation of Justice K Chandru in this respect is finding dust in TN Assembly. No action is taken on the recommendation. Leaving it, no boby knows whether the recommendations are accepted or NOT The honourable MP of Tuticorin (Srivaikundam comes under her jurisdiction) is also in war with the Union Govt.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors


Arputham Hospital







Thoothukudi Business Directory