» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!

ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)



திசையன்விளை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர் உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (46). அங்குள்ள கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை அவர் மன்னார்புரம் விலக்கு வழியாக திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தார். எதிரே திசையன்விளையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெய்சன் (20), மற்றும் கரன் (23) ஆகியோர் மற்றொரு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். 
 
வாழைத்தோட்டம் அருகே இரு பைக்குகளும் நேர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி முதல்வர் லிவிங்ஸ்டன் மற்றும் மாணவர் ஜெய்சன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த கரன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory