» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் ஒருவர் பலி : நண்பர் படுகாயம்!
சனி 15, பிப்ரவரி 2025 9:51:27 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் பைக் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சுப்பையா (65), இவர் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான சாகுல் ஹமீது மகன் செய்யது இப்ராஹிம் (63), என்பவர் உடன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கொங்கராயகுறிச்சிருக்கு சென்று கொண்டிருந்தார். கருங்குளம் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி பாலம் தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் தலையில் காயம் அடைந்த சுப்பையா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். செய்யது இப்ராஹிம் சிகிச்சைகாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:54:04 PM (IST)

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு : தாயிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:52 PM (IST)

வனங்களை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 5:12:35 PM (IST)

தூத்துக்குடியில் ஜன.21ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:56:45 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)








