» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் ஒருவர் பலி : நண்பர் படுகாயம்!
சனி 15, பிப்ரவரி 2025 9:51:27 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் பைக் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சுப்பையா (65), இவர் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான சாகுல் ஹமீது மகன் செய்யது இப்ராஹிம் (63), என்பவர் உடன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கொங்கராயகுறிச்சிருக்கு சென்று கொண்டிருந்தார். கருங்குளம் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி பாலம் தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் தலையில் காயம் அடைந்த சுப்பையா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். செய்யது இப்ராஹிம் சிகிச்சைகாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
