» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

“உன்னால் முடியும்” தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி: 10ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்பு

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:03:22 PM (IST)



நாகலாபுரத்தில் 10ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான "உன்னால் முடியும்” எனும் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் கம்மவார் திருமண மண்டபத்தில் வட்டார கல்வி மற்றும் வளர்ச்சி குழு சார்பாக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான உன்னால் முடியும் ஜெயித்துக் காட்டு என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாகலாபுரம் வட்டார கல்வி வளர்ச்சி குழு தலைவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் கடந்தாண்டு 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. செயலாளர் கிருஷ்ண பரமாத்மா, பொருளாளர் தேவராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், கந்தவேல்சாமி, மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை இணைச்செயலாளர் சேகர் ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முடிவில் அனைவருக்கும் அருஞ்சுவை உணவுவழங்கப்பட்டது  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory