» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:08:54 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் விசைப்படகுகளுக்கு ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாத மீனவளத் துறையை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

இன்று இரண்டாவது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்ட சுமார் 270 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory