» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்பட 2 போ் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:24:29 AM (IST)

கோவில்பட்டி அருகே கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் தங்கமுத்து. இவரது குலதெய்வக் கோயில் கொப்பம்பட்டியில் கண்மாய்க் கரை அருகே திறந்த வெளியில் உள்ளது. 

கடந்த 4 ஆண்டுகளாக பூசாரியாக உள்ள இவா், விசேஷ நாள்களில் கோயிலுக்குச் சென்று வழிபடுவாராம். கடந்த ஜன. 14ஆம் தேதி கோயிலில் பூஜை செய்துவிட்டுச் சென்ற இவா், நேற்று முன்தினம் (பிப். 9) தைப்பூச பூஜைக்காக கோயிலுக்கு சென்றாராம். அப்போது சுவாமி பீடம் முன் இரும்புக் குழாயில் பொருத்தப்பட்டிருந்த 8 வெண்கல மணிகளைக் காணவில்லையாம். 

புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து, ஜமீன் தேவா் குளம் தெற்குத் தெரு சின்னமாரியப்பன் மகன் சுடலை மாடசாமி (21), அம்மையாா்பட்டி வடக்குத் தெரு பங்காரு மகனான முன்னாள் ராணுவ வீரா் முருகன் (47) ஆகிய இருவரை நேற்று கைது செய்து, 4 மணிகளைப் பறிமுதல் செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital




New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory