» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்!

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 4:17:38 PM (IST)



கோவில்பட்டியில் இஎம்ஏஆர் ரத்ததான கழகம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இ.எம்.ஏ.ஆர் ரத்ததான கழகம் மற்றும் நெல்லை வாசன் கண் மருத்துவமனை சார்பில் இஎம்ஏ ராமச்சந்திரன் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம், தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. முகாமினை இ.எம்.ஏ.ஆர். ஜவுளி நிறுவனத்தின் மேலாளர் சங்கத் துவக்கி வைத்தார். வாசன் ஐ கேர் மருத்துவமனை மருத்துவர் ஜெயசீல கஸ்தூரி தலைமையில் கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. 

முகாமில் ஜவுளி கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, கண் பரிசோதனை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, லென்ஸ் பொருத்துதல் போன்ற கண் பிரச்சனைகள் தொடர்பாக பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்ச்சியில் வாசன் ஐ கேர் மார்க்கெட்டிங் மேலாளர் சூர்யா, இஎம்ஏஆர் ஜவுளி நிறுவன ஊழியர்கள் தங்கராஜ் சங்கிலி, பாண்டி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory