» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிஎஸ்ஏ சிகால் நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திங்கள் 3, பிப்ரவரி 2025 11:55:51 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் டெர்மினலை மூட எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் என்ற சிங்கப்பூர் நிறுவனம் சரக்கு கையாளும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என்றும், தற்போது டெர்மினலை மூடப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனைக் கண்டித்து பிஎஸ்ஏ சிகால் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)

தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்
வியாழன் 19, ஜூன் 2025 11:50:55 AM (IST)

தூத்துக்குடியில் கோவில், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை!
வியாழன் 19, ஜூன் 2025 10:49:32 AM (IST)

நூறு அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்!
வியாழன் 19, ஜூன் 2025 10:37:54 AM (IST)

Panner SelvamFeb 3, 2025 - 03:20:48 PM | Posted IP 172.7*****