» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ராஜகோபால் நகர் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

ஞாயிறு 19, ஜனவரி 2025 12:01:08 PM (IST)



தூத்துக்குடி ராஜகோபால் நகர் பகுதியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் அளித்த கோரிக்கையை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாநகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் 4வது தெரு கிழக்கு பகுதியில் பொதுமக்கள் சாலை வசதி செய்து தருமாறு அமைச்சர்  கீதாஜீவனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் ஜான் சீனிவாசன், வட்டச் செயலாளர் பொன்னுச்சாமி, வட்ட பிரதிநிதி வேல்முருகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory