» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோட்டார் பைக் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் பலி

சனி 18, ஜனவரி 2025 9:02:10 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே மோட்டார் பைக்  மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் சுடலை (55). கூலிதொழிலாளியான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கால்வாய் கிராமத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பொன்னங்குறிச்சி பகுதியில் சென்றபோது பின்னால் தென்காசியை சேர்ந்த பால்சாமி மகன் வேல்சாமி (40) என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதமாக சுடலை மீது பயங்கரமாக மோதியது.

இதில் சுடலை தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் போலீசார் விரைந்து வந்தனர். சுடலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads



New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory