» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளத்தூரில் பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள்

சனி 18, ஜனவரி 2025 8:51:27 AM (IST)



குளத்தூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கபடி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரில் தைத்திருநாள் தமிழர் திருநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் 49-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கிங் மேக்கர் நற்பணி மன்றம், நாட்டாமை சரத் குரூப்ஸ் நண்பர்கள் மற்றும் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கம் சார்பில் ஜாலி விளையாட்டு போட்டி மற்றும் சிறுவர்களுக்கான மாபெரும் கபடி போட்டி ஜன.15, 16 ஆகிய இரண்டு தினங்கள் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. 

இந்து நாடார் உறவின் முறை தலைவர், குளத்தூர் காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் தலைமை வகித்தனர். போட்டிகளில் பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors






Arputham Hospital



Thoothukudi Business Directory