» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி பெண் பலி!

சனி 18, ஜனவரி 2025 8:38:13 AM (IST)

கோவில்பட்டியில் சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வஉசி நகர் முதல் தெருவைச் சேர்ந்த முருகேசன் மனைவி ஜோதிலட்சுமி (50). மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார். இவரும், பொன்வேல்சாமி மனைவி கமலபுஷ்பம் என்பவரும் நேற்று மந்தித்தோப்பு சாலையில் உள்ள லயன்ஸ் கிளப் அருகே மினி பஸ்சிலிருந்து இறங்கி சாலையைக் கடக்க முயன்றனராம். 

அப்போது, ஜோதிலட்சுமி மீது பைக் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டிவந்த கணேஷ் நகரைச் சேர்ந்த அந்தோணி மகன் செல்வம் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory