» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒருவர் பலி!

திங்கள் 9, டிசம்பர் 2024 8:06:40 AM (IST)

ஆறுமுகநேரி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் குச்சிக்காட்டைச் சேர்ந்தவர் மாரியப்பன் (50). தொழிலாளியான இவர், நேற்று பைக்கில் ஆறுமுகநேரியிலிருந்து நல்லூர் செல்லும் சாலையில் நாகன்னியாபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, முன்னாள் சென்ற பைக்கை முந்த முயன்ற போது எதிரே வந்த திருநெல்வேலி - காயல்பட்டினம் அரசுப் பேருந்து, பைக் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital




Thoothukudi Business Directory