» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோதமாக மது பதுக்கிய வாலிபர் கைது!

ஞாயிறு 8, டிசம்பர் 2024 8:01:00 PM (IST)

பேய்க்குளத்தில் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். 

பேய்க்குளம் பஜார் பகுதியில் போலீசை கண்டதும் தலைமறைவான இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் ராமானுஜம்புதூர் இந்திரா நகரைச் சேர்ந்த சண்முகம மகன் சுடலை (32). 25 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory