» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாடகர் ஞாயிறு!!
ஞாயிறு 8, டிசம்பர் 2024 7:53:06 PM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாடகர் ஞாயிறு நடைபெற்றது.
சேகர தலைவர் ஜான் சாமுவேல் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். இந்த ஆராதனையில் ஒய்வு பெற்ற ஆசிரியை விக்டோரியா ஞானசிங் தேவ செய்தி அளித்தார். அதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனையில் பாடகர் குழுவினரின் சிறப்பு பாடல்கள் இடம் பெற்றது. இறுதியில் பாடகர் குழுவினருக்கு சபையின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் முன்னாள் குருத்துவக் காரியதரிசிஓய்வு பெற்ற குருவானவர் தேவராஜ் ஞான சிங் ஜெபித்து ஆசீர்வாதம் வழங்கினார்.
ஆராதனையில் சபை ஊழியர் ஸ்டேன்லி ஜான்சன் துரை, ஆலய பணியாளர் ஆபிரகாம், திருமண்டல பெருமின்ற உறுப்பினர் ஜெயபால், தேவதாஸ் சேகரச் செயலர் ஜான்சேகர் சேகர பொருளாளர் அகஸ்டின் செல்வராஜ், கமிட்டி அங்கத்தினர்கள் மற்றும் சபையார் கலந்து கொண்டனர் இந்த பாடகர் ஞாயிறு க்கான ஆராதனை ஏற்பாடுகளை பாடகர் குழு தலைவர் ஜோயல் கோல்டு வின் அவர்களோடு இணைந்து சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யலாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திங்கள் 10, நவம்பர் 2025 10:30:36 AM (IST)

நாசரேத் பேராலயத்தில் திருமண்டல தேர்தல்: எஸ்.டி.கே. அணி அமோக வெற்றி!
திங்கள் 10, நவம்பர் 2025 10:19:00 AM (IST)

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது கணக்குக்குழு 12ம் தேதி ஆய்வு : ஆட்சியர் தகவல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:17:57 AM (IST)

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் விஷம் கலந்து குடித்து தற்கொலை!
திங்கள் 10, நவம்பர் 2025 8:12:24 AM (IST)

கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திங்கள் 10, நவம்பர் 2025 8:04:41 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ உயிரிழப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 7:59:49 AM (IST)








