» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாடகர் ஞாயிறு!!

ஞாயிறு 8, டிசம்பர் 2024 7:53:06 PM (IST)



தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம்  திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாடகர் ஞாயிறு நடைபெற்றது. 

சேகர தலைவர் ஜான் சாமுவேல் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம்  செய்தார். இந்த ஆராதனையில்  ஒய்வு பெற்ற ஆசிரியை விக்டோரியா ஞானசிங் தேவ செய்தி அளித்தார். அதைத்தொடர்ந்து  சிறப்பு ஆராதனையில் பாடகர் குழுவினரின் சிறப்பு பாடல்கள் இடம் பெற்றது. இறுதியில் பாடகர் குழுவினருக்கு சபையின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் முன்னாள் குருத்துவக் காரியதரிசிஓய்வு பெற்ற  குருவானவர் தேவராஜ் ஞான சிங் ஜெபித்து ஆசீர்வாதம் வழங்கினார். 

ஆராதனையில் சபை ஊழியர் ஸ்டேன்லி ஜான்சன் துரை, ஆலய பணியாளர் ஆபிரகாம், திருமண்டல பெருமின்ற உறுப்பினர் ஜெயபால், தேவதாஸ் சேகரச் செயலர் ஜான்சேகர் சேகர பொருளாளர் அகஸ்டின் செல்வராஜ், கமிட்டி அங்கத்தினர்கள் மற்றும் சபையார் கலந்து கொண்டனர் இந்த பாடகர் ஞாயிறு க்கான ஆராதனை ஏற்பாடுகளை பாடகர் குழு தலைவர் ஜோயல் கோல்டு வின் அவர்களோடு இணைந்து சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory